தனிமனிதர்களாகச் சாதியின் இருப்பைச் சுமக்க விரும்பாதவர்களாகவே இருப்பவர்கள் குழுவாக வாழ நேரும்போதே சாதி மனிதர்களாகத் தங்களின் தன்னிலையை உருவாக்கிக்கொள்கின்றார்கள். அதிலிருந்து விலகும் வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டிய பொறுப்பில் புதிய அமைப்புகளும் அதன் பொறுப்பில் இருக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள். இத்தகையதொரு குரலை மென்மையாக எழுப்பிக் காட்டியுள்ளது மனசுக்காரன். இந்த மனசுக்காரன் சாதியால் பீடிக்கப்பட்ட கெட்ட மனசுக்காரன்களை அடையாளப்படுத்தாமல், நல்ல மனசுக்காரன்களின் இயல்பை எழுதிக்காட்டியுள்ளது.
அ.ராமசாமி

Reviews
There are no reviews yet.