1980களின் பிற்பகுதி முழுவதும் ஈழத்திலிருந்து எழுதப்பட்ட ஆற்றல் மிக்க அரசியல் கவிதைகளால் தமிழ்நாடு ஆட்கொள்ளப்பட்டிருந்தது. தமிழ் அரசியல் கவிதைகளின் போக்கே அதனால் மாற்றி அமைக்கப்பட்டது. ஒரு காலத்தில் பாரதிதாசனாலும், வானம்பாடிகளாலும் தாக்கம் பெற்று கவிதை எழுதிக்கொண்டிருந்த ஈழக் கவிஞர்கள் தமக்கான தனித்துவ அடையாளங்களோடு கவிதைகளைப் படைத்தார்கள். அது தமிழ் இலக்கிய உலகை வெகுவாகப் பாதித்தது. இடதுசாரிகளும், திராவிட இயக்கத்தைச் சேந்தவர்களும் உருவாக்கி வைத்திருந்த அரசியல் கவிதை மரபு மிகவும் பலவீனமாக இருந்ததால் அவற்றை ‘இலக்கியமே குறி’யென்று எண்ணும் கவிஞர்களும் விமர்சகர்களும் மிக எளிதாகத் தமது இடது கையால் ஒதுக்கித் தள்ளிக்கொண்டிருந்தார்கள். அந்த நிலையை ஈழக் கவிதைகளின் வருகைதான் மாற்றியமைத்தது. அரசியலை வெளிப்படையாகப் பேசுவதும்கூடக் கவிதையாக இருக்க முடியும் என்று அது நிரூபித்தது. மார்க்ஸியம் என்ற ஆற்றல்மிக்க தத்துவத்தைக்கொண்டு சமூகத்தை ஆய்வுசெய்துகொண்டிருந்தவர்கள் இலக்கிய தளத்தில் பல முக்கியமான கோட்பாடுகளை முன்வைத்திருந்தனர். ஆனால் அவர்கள் மகிழ்ச்சியோடு உதாரணம் காட்ட ஒரு தமிழ்க் கவிதையையும் முற்போக்குக் கவிஞர்கள் உருவாக்கியிருக்கவில்லை. அத்தகையக் கோட்பாட்டாளர்களுக்கு ஈழத்துக் கவிதை நூல்களே பேருதவி புரிந்தன. அவற்றுள் முதன்மையானது ‘இரண்டாவது சூரிய உதயம்’.
“அறியப்படாதவர்கள் நினைவாக” has been added to your cart. View cart
Sale
₹80.00 Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.
இரண்டாவது சூரியோதயம்
100 in stock
Author: cheran - சேரன்
SKU: A257
Categories: Poems - கவிதைகள், Srilankan Writers - இலங்கை எழுத்தாளர்கள்
Tag: manarkeni books
Reviews
There are no reviews yet.