100.00

நதிக்கரை மூங்கில்

100 in stock

Meet The Author

சற்றே விலகி
நந்தி வழி விட்டதுபோல்
வெலிக்கடையின் சிறைக்கூட
இருப்பு நெடுங்கதவம்
தானே திறக்கும்
அங்கே
காவலர்கள் அறியாமல்
கற்சுவர்கள் சூழ்கின்ற
அறைகட்குள் கொலை நடக்கும்

பகுத்தறிவு ஆளுகிற
புதிய யுகம்
அற்புதங்கள்
ஒருக்காலே நடந்தாலோ
ஒப்பார்கள் என்பதனால்
இருகால் நடந்தேறும்
கண்டு அலுத்த
கற்சுவரோ மௌனிக்கும்.

———–

 

திருகோணமலையில் வசிக்கும் சி.சிவசேகரம் இரண்டாம் உலகப் போரின்போது யாழ்ப்பாணம் இணுவிலில் 20.11.1942 இல் பிறந்தார். திருகோணமலை புனித மரியாள் பாடசாலையிலும், இந்துக் கல்லூரியிலும் கொழும்பு ராயல் கல்லூரியிலும் கல்வி பயின்று, 1964இல் இலங்கைப் பல்கலைக்கழகப் பொறியியல் பட்டதாரியானார். அடுத்து அப்பல்கலைக்கழக விரிவுரையாளராகி 1970இல் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்று பொறியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி 2018இல் ஓய்வுபெற்றார். இடையில், 1984 முதல் 1997 வரை லண்டன் இம்பீரியல் கல்லூரியில் முதுநிலை ஆய்வாளராகப் பணியாற்றினார்.

1970 ஆம் ஆண்டு முதல் கவிதை எழுதிவரும் இவர், 10 கவிதைத் தொகுதிகளும், 4 கவிதைத் தமிழாக்க நூல்களும், 2 இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைத் தொகுதிகளும், நாடக நூல்களும் மொழியியல் சமூக அரசியற் கட்டுரைத் தொகுப்புக்களும் என நாற்பது தமிழ் நூல்களைப் படைத்துள்ளார். அண்மையில் இவரது கவிதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு ஒரே நூலாக வெளியாகியுள்ளது.

இவரது மனைவி பிரேமளாவும் மகன் மணிமாறனும் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் ஆவர்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “நதிக்கரை மூங்கில்”

Your email address will not be published. Required fields are marked *